1946 நவம்பர் 11 உலக வரை படத்தில் மிக முக்கிய நாள். 8 மணி நேர வேலை கேட்டு பல போராட்டங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து அன்றைய பிரிட்டிஷ் அரசு 1935 ஆம் ஆண்டு வேலை நேரம் குறித்த சட்டத்தை இயற்றியது . தொழிற்சாலைகளில் 10 மணி நேரம் தொழிலாளர்கள் செய்யும் வேலை நேரம், இனிமேல் 9 மணி நேரமாக இருக்கும் என சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை அமலாக்க வேண்டுமென செங்கொடி சங்கம் போராடிய போது சில மில் முதலாளிகள் வேண்டா வெறுப்பு டன் அமலாக்கினர்.
கோவை ஸ்டேன்ஸ் மில் முதலாளியோ நய வஞ்சகமாக மாற்று ஆலோசனைகளை முன் வைக்கிறார். தொழிலாளிகள் தினசரி 10 மணி நேரம் வேலை செய்திட வேண்டும் என்றும், வாரத்தில் ஒன்னரை நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கிறார்.
ஆனால் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால் ஸ்டேன்ஸ் மில் முதலாளியால் இதைச் செய்ய முடியவில்லை. இதனால் ஸ்டேன்ஸ் மில்முதலாளி பெண்கள் உள்ளிட்ட 16 தொழிலாளி களை வேலை நீக்கம் செய்கிறார்.
வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை யை முன்னிறுத்தி 1946 அக்டோபர் மாதம் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. அன்றைய சென்னை மாகாண அரசு இப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை காது கொடுத்து கேட்கவில்லை .
அதே நேரத்தில் ஆலையை இயக்க, வெளி யில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வேலை நிறுத்தத்தை உடைக்க ஸ்டேன்ஸ் மில் நிர்வாகம் திட்டமிட்டது. இதை அறிந்த தொழிலாளர்கள் முந்தைய நாள் கோவை காட்டூர் செங்கொடி சங்க அலுவலகத்தில் கூடி விவாதிக்கின்றனர்.
அன்றைய காலத்தில் பஞ்சாலை தொழிலா ளர்களுக்கு செங்கொடிச் சங்கம் துவங்கப்பட்டு தோழர்கள் கே .ரமணி, ஆர் .உமாநாத், என். கண்ணாங்குட்டி உள்ளிட்ட பல தோழர்கள் தலைமையேற்று நடத்தி வந்தனர் .
இது இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலம் .பல தலைவர்கள் சிறைச்சாலைக்குள்ளும், சில தலைவர்கள் வெளியே இருந்தாலும் தலைமறைவாக இருந்து செயல்பட்டுள்ளனர். கோவை காட்டூர் சங்க அலு வலகத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களிடத்தில் தலைவர்கள் ஆலோசனை களை வழங்கி எப்படியேனும் வேலை நிறுத்தம் தொடர வேண்டும். அப்போதுதான் நமது கோரிக்கை நிறைவேறும் என்று சொல்ல ...
செங்கொடி இயக்கத்தின் முன்னணி ஊழிய ராக இருந்து செயல்பட்டு வந்த பாப்பம்மாள் கம்பீரமாக எழுந்து நின்று தலைவர்கள் தலை மறைவாக இருப்பதும் நேரடியாக போராட்டக் களத்திற்கு வர முடியாத நிலையில் இருப்பதையும் உணர்ந்து தான் இப் போராட்டத்தை தலைமை யேற்று நடத்தித் தர உறுதியளிக்கிறார் . மற்ற பெண் தொழிலாளர்களும் நாங்களும் இப் போராட்டத் தை உறுதியாக நடத்திடுவோம் என்று சபதம் ஏற்கின்றனர்.
மறுநாள் நவம்பர் 11 காலையில் செங்கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாகச் சென்று ஆலை வாயிலில் கூடுகின்றனர் . மறியல் போ ராட்டத்திற்கு ஆண் தொழிலாளர்களும் ஆதர வளித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுகின்ற னர். மிகச் சரியாக 11 மணி, இரண்டாவது உலக யுத்தம் நிறைவுற்றதை ஒட்டி ஆலையில் சங்கொலி எழுப்பப்படுகிறது. அதையொட்டி இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிகழ்வு முடிந்தவுடன் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை உடைக்க ஆலைக்குள் செல்ல முயற்சிக்கின்றனர்.
அங்கே தயார் நிலையில் இருந்த பெண் தொழிலாளர்கள் ஸ்டேன்ஸ் மில் கேட் முன்பு படுத்து மறியல் செய்கின்றனர் . யார் உள்ளே நுழைய வேண்டும் என்றாலும் பெண்களை மிதித்துக் கொண்டுதான் செல்ல முடியும் . செய்வதறியாது திகைத்த நிர்வாகம் போலீசை வர வைத்து மிரட்டி கலைக்கப் பார்க்கிறது. போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் பூட்ஸ் அணிந்த கால்களுடன் மறியல் செய்து படுத்துக் கொண்டிருந்த பெண்கள் மேல் ஏறிச் செல்கின்றனர் .
இதை பார்த்து கோபமுற்ற பாப்பம்மாள், பெண்கள் மீது பூட்ஸ் காலுடன் நடந்து வந்த போலீஸ்காரனை தடுக்கிறார். அந்த போலீஸ்கார னோ பாப்பம்மாளை கீழே தள்ளிவிட்டு பூட்ஸ் காலால் அவரை மிதித்து தனது கையில் வைத்தி ருந்த துப்பாக்கியின் முனையில் இருந்த கத்தியை கொண்டு பாப்பம்மாளின் கழுத்திலும் உடலின் பல இடங்களிலும் குத்துகிறான் .அதை பார்த்து கோபமுற்ற அம்மு கோபால் என்ற தொழிலாளி தடுக்கப் போக அவருக்கும் அதே நிலை ஏற்பட இருவரும் போலீஸின் கொடூரமான தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் உயிரிழக்கின்றனர்.
இந்த கொடுமையை பார்த்த மற்ற பெண் தொழிலாளர்களுக்கு கோபமும் ஆவேசமும் ஏற்பட அங்கே ஒரு மாபெரும் யுத்தம் நடைபெறு கிறது. தொழிலாளர்களும் போலீசும் மோதிக் கொண்டதில் பல போலீஸ்காரர்களுக்கு பலத்த காயம். அதேபோல் நூற்றுக்கணக்கான தொழிலா ளர்களுக்கும் பலத்த காயம் .மேலும் கூடுதலான போலீஸ் அங்கே வந்து ஸ்டேன்ஸ் ஆலையின் கட்டிடத்தின் மேலே ஏறி நின்று கூட்டத்தை பார்த்து துப்பாக்கிச் சூடு நடத்த 11 பேர் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளனர். மில் வளாகம் துவங்கி சாலைகள் முழுவதும் தொ ழிலாளர்களின் ரத்தத்தால் சிவந்து கிடந்தது. காவல்துறையோ தனது கொடூரத்தை தொடர்ந்தது. ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்து சிறையில் அடைத்தது.
போராட்டச் செய்தி கோவை நகரெங்கும் பரவ, அருகில் இருந்த காளீஸ்வரா மில், சோமசுந்தரா மில் தொழிலாளர்களும் புரூக்பாண்டு ஆலை தொழிலாளர்களும் திரண்டு வந்தனர்.
மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் அமலில் இருந்தது. ஆலையை திறக்க வேண்டும் என எண்ணிய நிர்வாகம் வெளியூரிலிருந்து ஆட்களை கொண்டு வர துவங்கினர் .அதை ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் தடுக்க முயன்ற கைகலப்பில் கருங்காலி ஒருவன் உயிரிழக்க அது கொலை வழக்காக மாறி தலைமறைவாக இருந்த தலைவர்கள் மீது வழக்குப் பதிவாகிறது.
கே .ரமணி, ஆர்.உமாநாத், என். கண்ணாங் குட்டி, எஸ். கிருஷ்ணன் ஆறுமுகம் என ஒரு நீண்ட பட்டியலை தயாரித்து வழக்கு பதிவு செய்து தோ ழர்களை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்து செயல்பட்ட தலைவர்கள் அடுத்தடுத்து பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1946 ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 11 பேர் என்று பதிவாகி யுள்ளது. 11 பேர் அல்ல ....12 பேர்.. ஆம்... கம்பீரமாக முன்வந்து போராட்டத்திற்கு தலைமை ஏற்ற பாப்பம் மாள் வயிற்றில் இருந்த ஆறு மாத குழந்தையும் சேர்த்து 12 பேர்.
பாப்பம்மாள், அம்மு கோபால், மந்திரியப் பன், குள்ளப்பன், பழனியப்பன், ஆர். கிருஷ்ண மூர்த்தி என ஆறு பேர் பெயர்கள் மட்டுமே அடை யாளப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளின் குண்டுகளை சுமந்தவர்கள் .... ரத்தம் சிந்தியவர்கள்.. சிறையில் கொடுமை யை அனுபவித்தவர்கள்... வழக்கை எதிர்கொண்ட வர்கள்.. என ஆயிரம் பேர் இந்த தியாகப் போராட் டத்திற்கு சொந்தக்காரர்கள்..
77 ஆண்டுகளை கடந்த பின்னும் இன்றும் சுதந்திர இந்தியாவில் கார்ப்பரேட் பெரு முத லாளிகள் துவங்கி உள்ளூர் முதலாளிகள் வரை தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டல் தொடர்கிறது.
எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட நூற்றாண்டு கள் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாத்திடவும் தொழிலாளர்கள் வர்க்கமாய் ஒன்றுபடாமல் மாற்றம் இல்லை என்பதை உரக்கச் சொல்லுவோம்.
ஸ்டேன்ஸ் மில் போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம். வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப் போம். ஆர்.வேலுசாமி, கோவை